Pages

Thursday 22 November 2012

பிறந்தநாள் வாழ்த்து

ஓராயிரம் தேவர்கள் ஈராயிரம் மலர்களை தூவி 
பிறந்தநாள் வாழ்த்து சொன்னாலும்
என் மனம் நிறையவில்லை,

ஏனென்றால் 
என் நண்பனின் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் நான்!!!

Wednesday 21 November 2012

கதிரவனின் காதல்

கதிரவன்  தினமும் தன் தூக்கத்தை தியாகம் செய்வதும்  
மேகங்களை கிழித்து கொண்டு ஆவலுடன் வருவதும்  ,

உலகிற்கு ஒளி  அளிக்க அல்ல 
பெண்ணே உன் அழகை ரசிக்க !!!

ஆனால் கருமேகமோ கண் சிமிட்டி கொண்டிருக்கும் 
கதிரவனின் கண்ணை மறைத்த சந்தோஷத்தில்  
தன்  ஆனந்த கண்ணீரை மழையாக பொழிகிறான்;) 
  

Tuesday 20 November 2012

விடியல்

விடியலின் கீதம் பறவைகளுக்குரியது 

அந்த கீதங்கள் முற்று பெறும் வேலையிலே 


கிழித்து வரும் செங்கிரணங்கள்,


மலர்ந்து வரும் பூக்கள் 


இன்றைய நாள் இனிய நாள் என்று 


நம்பிக்கை தரும் தோரணையில் !!!