கதிரவன் தினமும் தன் தூக்கத்தை தியாகம் செய்வதும் மேகங்களை கிழித்து கொண்டு ஆவலுடன் வருவதும் , உலகிற்கு ஒளி அளிக்க அல்ல பெண்ணே உன் அழகை ரசிக்க !!! ஆனால் கருமேகமோ கண் சிமிட்டி கொண்டிருக்கும் கதிரவனின் கண்ணை மறைத்த சந்தோஷத்தில் தன் ஆனந்த கண்ணீரை மழையாக பொழிகிறான்;)
விடியலின் கீதம் பறவைகளுக்குரியது அந்த கீதங்கள் முற்று பெறும் வேலையிலே கிழித்து வரும் செங்கிரணங்கள், மலர்ந்து வரும் பூக்கள் இன்றைய நாள் இனிய நாள் என்று நம்பிக்கை தரும் தோரணையில் !!!